N

4.9.11

ஆடு, மாடு உள்ளிட்ட இலவச திட்டங்கள்-அண்ணா பிறந்த நாளில் துவக்கம் !


முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் அரசு அறிவித்த இலவச திட்டங்கள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என முதல்வர் செல்வி ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி அண்ணா பிறந்த நாளான வருகிற 15-ந் தேதி, இத்திட்டங்களின் ஒரு பகுதியை  தொடங்கி வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர்களும், அரசு உயர் அதிகாரிகளும் மும்முரமாக  செய்து வருகின்றனர்.
தமிழக முதலமைச்சராக பொறுப்பு ஏற்ற ஜெயலலிதா, தேர்தலின் போது அறிவிக்கப்பட்ட இலவச திட்டங்களை முழுமையாக  நிறைவேற்றுவோம் என்று உறுதி அளித்தார்.
அதன்படி அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள், அரசு கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு இலவச லேப்-டாப், தாய்மார்களுக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறி. வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு தலா ஒரு கலப்பின கறவை மாடு, விவசாய கூலித் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா 4 வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள்.
இத்திட்டங்களை அண்ணா   பிறந்த நாளில் துவங்குவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.இதில், முக்கியமான 3 திட்டங்களுக்கு பட் ஜெட்டில் ரூ.2,353 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.