N

15.5.11

விஜயகாந்திற்கு அழைப்பு விடுப்பீர்களா ? ஜெ. பதில்


அதிமுகவின் பதவி ஏற்பு  விழாவில்  கலைந்துகொள்வீர்களா என விஜயகாந்திடம் கேட்டதற்கு,  அழைத்தால் அதுபற்றி முடிவு செய்வேன்’’ என்று கூறினார்.

இந்நிலையில் அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் முன்னிலையில் நடந்தது. கூட்டத்தில் சட்டமன்ற அ.தி.மு.க. தலைவராக ஜெயலலிதா ஏகமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலாவை ஜெயலலிதா சந்தித்து புதிய அரசு அமைக்க அனுமதி கோரி கடிதம் அளித்தார்.
    எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலு வலகத்தில் கூடினர்.    

சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நாளை பதவியேற்பு நடைபெறுகிறது. 

பகல் 12.15 மணிக்கு இந்த பதவியேற்பு விழா நடபெறும் என்று  தலைமைச்செயலர் மாலதி  தெரிவித்தார்.
இந்த பதவியேற்பு விழாவில் எதிர்க்கட்சிகளுக்கும் அதிமுக அழைப்பு விடுத்துள்ளது.   

பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள தேதிமுக தலைவர் விஜயகாந்துக்கு அழைப்பு விடுப்பீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த ஜெயலலிதா,   ‘’பதவியேற்பு விழாவுக்கு கூட்டணி கட்சிகள அனைத்துக்கும் அழைப்பு விடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.

அவர் மேலும்,  மின்வெட்டை சீர் செய்ய முன்னுரிமை தரப்படும்.  பல்வேறு துறைகளிலும் ஏற்பட்டுள்ள பின்னடவை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

பெட்ரோல் விலை உயர்வு துரதிஷ்டம்’’ என்று தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.