
உ.பி., மாநில காங்கிரஸ் விவகாரத்தை கவனிக்கும் திக் விஜய் சிங் கூறியதாவது: உத்தர பிரதேசத்தில் ராகுலுக்கு போட்டியாக மாயாவதியோ, முலாயம் சிங் யாதவோ, யாரும் கிடையாது. அவருக்கு நிகர் அவர் தான்.
நல்ல பிரதமராவதற்குரிய தகுதிகள் அனைத்தும் ராகுலிடம் உள்ளன. அவருடன் நெருங்கி பழகுபவன் என்ற முறையில் இதை சொல்கிறேன். மக்களின் உள்ளக்கிடக்கை நன்கு அறிந்தவர். மன பக்குவம் பெற்ற அவர் பிரதமராக வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
சிந்திக்கவும்: குடும்ப அரசியல் இந்தியாவின் சாபக்கேடு. கேட்டால் ஜனநாயக நாடு என்று சொல்வார்கள், அமெரிக்கா போல் இந்தியாவிலும் பிரதமரை தேர்ந்தெடுக்கும் முறையை கொண்டுவரவேண்டும்.
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.