புதுடெல்லி:வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியத் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் அந்த நாடுகளில் ஓய்வூதிய மற்றும் ஆயுள் காப்பீட்டு நிதியத்தை அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.

அதிக ஆயுள், குறைந்த வருமானம் போன்ற காரணங்களால் வயதான காலத்தில் அவர்கள் வறுமையில் வாடும் ஆபத்து அதிகமாக இருக்கிறது.
புதிய திட்டத்தின்படி, ஆண்டுக்கு ரூபாய் ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை செலுத்தும் தொழிலாளர்களுக்கு அரசின் பங்களிப்பாக ஆண்டுக்கு ரூபாய் ஆயிரம் கிடைக்கும். பெண் தொழிலாளர்களுக்கு அரசின் ரூபாய் ஆயிரம் பங்களிப்பு தவிர வெளிநாடுவாழ் இந்தியர் விவகாரத்துறை அமைச்சகத்தின் சார்பில் கூடுதலாக ரூபாய் ஆயிரம் அளிக்கப்படும்.
இந்தத் திட்டத்துக்கு ‘தேசிய ஓய்வூதியத் திட்டம் – லைட்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.