நடைபெற்ற தேர்தலில் தேமுதிக 41 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் நம்பிக்கை தெரிவித்தார்.
தேர்தல் நடைபெறும் போது விழுப்புரம் மாவட்டத்துக்கு வந்த விஜயகாந்த், ரிஷிவந்தியம், பகண்டை கூட்டுரோடு, மேலபழங்கூர், சீர்பனந்தல் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் சென்று வாக்குச் சாவடிகளை பார்வையிட்டார்.
பகண்டை கூட்டுச் சாலையில் செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த்,
அதிமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு நல்ல முறையில் உள்ளது. நான் பல்வேறு இடங்களை பார்வையிட்டு வருகிறேன். நான் சென்ற இடங்களில் பார்க்கும்போது வெற்றி
பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. எனது உடல்நிலை சரியில்லாததால், மருத்துவர்கள் ஓய்வெடுக்கச் சொன்னார்கள். ஆனாலும் நான் தொகுதியை பார்க்க வந்துள்ளேன்.
இந்த தேர்தலில் தேமுதிக போட்டியிடும் 41 தொகுதிகளிலும் வெற்றி பெறும். ரிஷிவந்தியம் தொகுதிக்கு இணைப்புச் சாலை இல்லை என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். நான் வெற்றி பெற்றதும் இங்கு இணைப்புச் சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்றார்.
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.