N

21.5.11

மதுரை ரவுடிகளை ஒழித்துக்கட்டுவதே எங்கள் முதல் வேலை : அமைச்சர் செல்லூர் கே. ராஜு


சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற செல்லூர் கே. ராஜூ,  கூட்டுறவுத்துறை அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
தேர்தல் வெற்றிக்குப் பிறகு இன்று தொகுதிக்கு வந்தார். அவரது தொகுதிக்கு உட்பட்ட ஜெய்ஹிந்த்புரம், சோலை அழகுபுரம் ஆகிய பகுதிகளுக்கு சென்று  மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
முன்னதாக அவர் மதுரை ரயில்நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர்,   ‘’எங்களது ஆட்சியில் ரவுடிகளை ஒழிப்பதுதான் முதல் வேலை.   அதுவும் மதுரையில் உள்ள ரவுடிகளை ஒழித்துக்கட்டுவதுதான் முதல் குறிக்கோள்’’ என்று கூறினார்.
அவர்  மேலும்,  ‘’ ரவுடிகளை ஒழித்துக்கட்ட மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் முதல்வர்’’ என்று தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.