N

2.7.11

குடும்ப கட்டுபாடு செய்தால் நானோ கார் பரிசு!

ஜோத்பூர் : குடும்பக் கட்டுப்பாட்டை ஊக்குவிக்க குடும்பக் கட்டுப்பாடு செய்ய முன்வருபவர்களுக்கு தொலைக்காட்சி, மைக்ரோ ஓவன், நானோ கார் என 
பல்வகை பரிசுகளை அளிக்கவுள்ளதாக ராஜஸ்தான் அரசாங்கம் செய்தி வெளியிட்டுள்ளது. ராஜஸ்தானின் மாவட்ட உதவி மருத்துவ அதிகாரி ப்ரதாப் சிங் தத்தர் 
கூறுகையில் “ குடும்பக் கட்டுபாட்டை ஊக்குவிக்கும் பொருட்டு ஜூலை 1 முதல் செப்டம்பர் 30 ம் தேதி வரை குடும்பக் கட்டுபாடு செய்பவர்களின் பெயர்கள் 
குலுக்கலில் இடம் பெறும். குலுக்கலில் முதல் பரிசு பெறுபவறுக்கு டாடாவின் நானோ காரும் மற்றவர்களுக்கு பைக்குகள், தொலைக்காட்சி, மைக்ரோ வேவ் ஓவன்கள் போன்றவை வழங்கப்படும்” என்றார். ஆனால் இத்திட்டத்திற்கு சில சமூக சேவை குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.