N

14.8.11

இந்தியாவின் படு தோல்வி குறித்து விசாரணை நடத்தப்படும்-பிசிசிஐ

டெல்லி: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா இழந்துள்ளது குறித்து ஆய்வு நடத்தப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் என்.சீனிவாசன் கூறுகையில், இந்தியாவின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் முடிந்தவுடன் இந்திய வீரர்களின் செயல்பாடுகள் குறித்து ஆராயப்படும். என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.

தற்போது டெஸ்ட் தொடர் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு நாள் போட்டித் தொடர் தொடங்கவுள்ளது. டுவென்டி 20 போட்டியிலும் இந்திய வீரர்கள் ஆடவுள்லனர். எனவே இப்போது அதுகுறித்து என்த முடிவும் எடுக்கப்பட மாட்டாது. வீரர்களின் கவனத்தை திசை திருப்ப நாங்கள் விரும்பவில்லை. தொடர்கள் முடிந்து நாடு திரும்பியதும் இதுகுறித்து ஆராயப்படும் என்றார்.

மேலும் அவர் கூறுகையில், வீரேந்திர ஷேவாக், ஜாகீர் கான், கெளதம் கம்பீர், ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங் ஆகியோர் வெவ்வேறு முக்கிய கால கட்டங்களில் ஆட முடியாமல் போனதும், காயமடைந்ததும் அணிக்கு பெரும் பின்னடைவாகி விட்டது.

இந்திய அணி விளையாடிய சூழலையும், வீரர்களின் நிலையையும் நாம் பார்க்க வேண்டும். முழு தகுதியுடன் கூடிய அணியாக நமது அணி மூன்று போட்டிகளிலும் ஆட முடியாமல் போய் விட்டது.எல்லோலும் நல்ல நிலையில் இருந்திருந்தால் இந்த தொடரின் நிலையே வேறு மாதிரியாக இருந்திருக்கும்.

டெஸ்ட் போட்டிகளை விட ஐபிஎல் போட்டிகளுக்கும், ஒரு நாள் கிரிக்கெட்டுக்கும் மட்டுமே இந்திய கிரிக்கெட் வாரியம் முக்கியத்துவம் தருவதாக கூற முடி்யாது. அது தவறான கருத்து. முட்டாள்தனமானது. டெஸ்ட் போட்டிதான் கிரி்ககெட்டின் முன்னோடி. எனவே அதை புறக்கணித்து விட்டு மற்ற போட்டிகளுக்கு முக்கியத்துவம் தர மாட்டார்கள் யாருமே. நாம் டெஸ்ட் தர வரிசையில் முதலிடத்திற்கு உயர்ந்தபோதும், அந்த இடத்தில் கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் வரை இருந்தபோதும் யாரும் இப்படி கேள்வி கேட்கவில்லை.

ஆனால் ஒரு போட்டித் தொடரில் மோசமாக செயல்பட்டுள்ளதைத் தொடர்ந்து கடும் விமர்சனங்கள் எழுகின்றன. விளையாட்டை விளையாட்டாக எடுத்துக் கொள்ள வேண்டு். ஒரு போட்டியில் அல்லது ஒரு தொடரில் தோற்பதன் மூலம் நமது சிறப்புகளையும், திறமைகளையும் குறைத்து மதிப்பிட்டு விடக் கூடாது என்றார் சீனிவாசன்.

சீனிவாசன் அடுத்த மாதம் இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் பொறுப்பை ஏற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.