வெறும் 15ம் நிமிடம் ரீசார்ஜ் செய்தால் ஒரு வாரத்துக்கு மேல் பயன்படுத்தக்கூடிய செல்போன் பேட்டரி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. குறைந்த நேரம் ரீசார்ஜ் செய்து, அதிக நேரம் பயன்பாட்டில் இருக்ககூடிய பேட்டரி தயாரிப்பில் வடமேற்கு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். தொடர்ந்து ஆராய்ச்சி செய்ததன் மூலம் செல்போன், ஐபோனில் பயன்படுத்தப்படும் வீரியம் கூடிய லித்தியம் ஐயன் பேட்டரியை கண்டுபிடித்தனர்.
இது தற்போது நடைமுறையில் உள்ள செல்போன் பேட்டரி தொழில்நுட்பத்தைவிட 10 மடங்கு சக்திவாய்த்தது. இதை தொடர்ந்து எலக்ட்ரிக் கார் மற்றும் பல பயன்பாட்டுக்கான சக்தி வாய்ந்த பேட்டரிகளை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இவ்வகை பேட்டரிகள் அடுத்த 3 ஆண்டுகளில் சந்தையில் கிடைக்கும் என்று பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.