
குமரி மாவட்டத்தில் தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் பாக்கியராஜ் பிரசாரம் செய்தார். நாகர்கோவில் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஆர்.மகேசை ஆதரித்து பேசிய நடிகர் பாக்கியராஜ்,
தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, நெல்லை படித்தவர்கள் நிறைந்த மாவட்டங்களாக உள்ளன. ஆகவே தி.மு.க. சார்பில் முதல் அமைச்சர் கலைஞர் வெளியிட்ட தேர்தல் அறிக்கையையும், எதிர் அணியினர் வெளியிட்ட தேர்தல் அறிக்கையையும் நீங்கள் படித்து இருப்பீர்கள். தி.மு.க. தேர்தல் அறிக்கையை கலைஞர் வெளியிட்டதும், எதிர் அணியினர் என்ன தேர்தல் அறிக்கை கொடுப்பது என்று கூட யோசிக்கவில்லை.
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சில மாற்றங்களை செய்து தேர்தல் அறிக்கையாக அறிவித்து உள்ளனர். ஏழைகளுக்கு 35 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்று கலைஞர் அறிவித்தார். உடனே அந்த அம்மா 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்றார்.
கலைஞர் கிரைண்டர், மிக்சி கொடுப்போம் என்றதும், கிரைண்டர், மிக்சியுடன், மின்விசிறி கொடுப்போம் என்றார். திருமண உதவித் திட்டத்தை நிறுத்தியவரே இந்த அம்மையார்தான். திருமண நிதி உதவியாக ரூ.30 ஆயிரம் வழங்கப்படும் என்று கலைஞர் அறிவித்தார்.
அவர் திருமண நிதி உதவியாக ரூ.25 ஆயிரத்துடன் 4 கிராம் தங்கம் தருவோம் என்று கூறி உள்ளார். கலைஞர் வெளியிட்ட தேர்தல் அறிக்கையை சிறிது மாற்றி ஏட்டிக்கு போட்டியாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உள்ளனர்.
வைகோ 5 ஆண்டுகளாக உடன் இருந்தவர், அவரையே கழற்றி விட்டார். அதனால் வைகோ தேர்தலில் நிற்க வில்லை என்று போய் விட்டார். அந்த கூட்டணியில் சேர்ந்துள்ள விஜயகாந்துக்கும் அதே நிலை தான் வரும்.
அ.தி.மு.க. தே.மு.தி.க. கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. மக்கள் இதை புரிந்து கொண்டுள்ளனர். தேர்தல் நேரத்தில் எந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியுமா அதை மட்டுமே கலைஞர் அறிவித்துள்ளார். 2006ம் ஆண்டு ஒரு கிலோ அரிசி ரூ.2க்கு கொடுப்போம், டி.வி. வழங்குவோம் என்று அறிவித்தார். இது எப்படி செய்ய முடியும் என்று கேட்டனர். ஆனால் தற்போது ஒரு கிலோ அரிசி ரூ.1 க்கு வழங்கப்படுகிறது என்றார்.
அ.தி.மு.க. தே.மு.தி.க. கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. மக்கள் இதை புரிந்து கொண்டுள்ளனர். தேர்தல் நேரத்தில் எந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியுமா அதை மட்டுமே கலைஞர் அறிவித்துள்ளார். 2006ம் ஆண்டு ஒரு கிலோ அரிசி ரூ.2க்கு கொடுப்போம், டி.வி. வழங்குவோம் என்று அறிவித்தார். இது எப்படி செய்ய முடியும் என்று கேட்டனர். ஆனால் தற்போது ஒரு கிலோ அரிசி ரூ.1 க்கு வழங்கப்படுகிறது என்றார்.
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.