N

12.4.11

நான் 100 சீட் கேட்டிருந்தாலும் கலைஞர் கொடுத்திருப்பார்!!

விஜயகாந்துடனான விவகாரத்திற்கு பிறகு அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என்று அறிவித்தார் வடிவேலு. அதன்பிறகு தேர்தலில் போட்டியிடும் முடிவை மாற்றிக்கொண்டார்.

நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக நடிகர் வடிவேலு தமிழகம் முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இவர் பட்டுக்கோட்டை பிரச்சாரத்தின் போது அதிர்ச்சி குண்டை வீசினார்.

’உங்களுக்கெல்லாம் நான் ஒரு உண்மையைச் சொல்லப்போகிறேன். இதுவரை சொல்லவில்லை. இப்போது சொல்கிறேன். வடிவேலு உனக்கு சீட் எதுவும் வேணுமா என்று கலைஞர் என்னிடம் கேட்டார்.

அதெல்லாம் வேணாம்யா. உங்களுக்கு ஆதரவா நான் பிரச்சாரம் செய்யுறேன் என்று சொல்லிவிட்டேன். எனக்கு கட்சி ஆரம்பிக்கனும் என்று ஆசை இருந்தா நான் 100 சீட் கேட்டிருந்தாலும் கலைஞர் கொடுத்திருப்பார்’’ என்று மிகப்பெரும் அதிர்ச்சி குண்டை மிகச்சாதாரணமாக வீசினார்.

சிந்திக்கவும்: அட இதுதான் வடிவேலு அடித்த காமடியில் பெரிய காமடியாக இருக்கும். ஆளும் கட்சி காங்கிரசுக்கே அடித்தார் ஆப்பு. அவர்களை சி பி ஐ ரைடுவரை நடத்திதான் இந்த சீட்டை பெற்றுள்ளார்கள். உங்களுக்கு நூறு சீட்டா கனவில் கூட கிடைக்காது

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.