
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா 01.04.2011 அன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக அவர் போயஸ் கார்டனில் இருந்து வெளியே வந்தார்.
அப்போது ஜெயலலிதாவிடம், செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:
கேள்வி: கருத்துக்கணிப்புகளில் எல்லாம் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று கூறப்படுகிறதே?
பதில்: கருத்துக்கணிப்பில் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
கேள்வி: அ.தி.மு.க. கூட்டணி எத்தனை இடங்களில வெற்றி பெறும்?
பதில்: எனது சொந்த கணிப்பின்படி அ.தி.மு.க கூட்டணி 218 இடங்களுக்கு குறையாமல் வெற்றி பெறும். எனவே தொங்கு சட்டசபை ஏற்பட வாய்ப்பில்லை. அ.தி.மு.க. தனித்தே ஆட்சி அமைக்கும்.
கேள்வி: விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்தின்போது தனது கட்சி வேட்பாளரை அடித்துள்ளாரே? அதுமட்டுமல்லாமல், அ.தி.மு.க. கொடியை கீழே இறக்கும்படி கூறியிருக்கிறாரே?
பதில்: மன்னிக்கவும். தேர்தல் பிரசாரத்துக்கு நேரமாகிவிட்டது. நான் செல்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.