N

31.8.11

நோன்பு பெருநாள் - தமிழகம் முழுவதும் உற்சாக கொண்டாட்டம்!

சென்னை: ரம்ஜான் பண்டிகை இன்று தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. மசூதிகள் மற்றும் ஈத்கா மைதானங்களில் சிறப்புத் தொழுகைகள் நடத்தப்பட்டன.

இன்று ரம்ஜான் பண்டிகை. இதையொட்டி கடந்த 30 நாட்களாக நோன்பு நோற்று வந்த இஸ்லாமியர்கள் தங்களது புனிதக் கடமையை முடித்து விட்டு இன்று ரம்ஜான் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடுகின்றனர்.

இதையொட்டி காலையிலேயே பள்ளிவாசல்கள், ஈத்கா மைதானங்களில் சிறப்புத் தொழுகைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் புத்தாடை அணிந்து இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டனர்.

சென்னையில் திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு மசூதிகளில் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன. அதில் ஆயிரக்கணக்கானோர் பங்கு கொண்டு தொழுகையில் கலந்து கொண்டனர். தொழுகைக்குப் பின்னர் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி ரம்ஜான் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனர்.

ரம்ஜானையொட்டி தமிழக ஆளுநராக இன்று பொறுப்பேற்கும் கே.ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.