N

26.2.12

சங்கரன்கோவிலில் விஜயகாந்த் 5 நாள் பிரசாரம்!!


சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தேமுதிக வேட்பாளரை ஆதரித்து அக் கட்சித் தலைவர் விஜயகாந்த் 5 நாள்கள் பிரசாரம் மேற்கொள்ள இருப்பதாக அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.


அக்கட்சி வேட்பாளராக க. முத்துக்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் வெள்ளிக்கிழமை கட்சி நிர்வாகிகளுடன் சங்கரன்கோவிலில் வேட்புமனு தாக்கல் செய்தார். அவருக்கு ஆதரவு திரட்ட அக் கட்சியின் முன்னணித் தலைவர்கள் திங்கள்கிழமை முதல் (பிப்ரவரி 27) பிரசாரத்தில் ஈடுபடவுள்ளதாகத் தெரிகிறது.

கட்சித் தலைவர் விஜயகாந்த் மார்ச் 5 முதல் தொகுதியில் முகாமிட்டு 5 நாள்கள் தொடர் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளதாகவும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.