ஆழ்ந்த உறக்கத்துக்காக சிலர் தூக்க மாத்திரைகளை பயன்படுத்துகின்றனர். இது அவர்களின் உயிரை பறித்து விடும் என நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். அமெரிக்காவில் மொத்தம் 23,500 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர் களில் 10,500 பேர் தூக்க மாத்திரை சாப்பிடுபவர்கள்.
தூக்க மாத்திரை சாப்பிட தொடங்கிய 2 1/2 வருடத்தில் பலவிதமான நோய்களுக்கு ஆளாகினர். இவர் களில் 35 சதவீதம் பேர் புற்று நோயினால் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக 18 முதல் 55 வயதுக்குட் பட்டவர்களுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தூக்க மாத்திரைகள் சாப்பிடும் அளவை பொறுத்து அவர்களின் உயிருக்கு ஏற்படும் ஆபத்தின் அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எனவே, தூக்க மாத்திரைகளை எடுத்து கொள்வது உடல் நலத்துக்கு ஆபத்து என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தூக்க மாத்திரைகள் சாப்பிடுவதை நிறுத்துபவர்கள் தங்களது டாக்டர்களின் அறிவுரையை கேட்டு அதன்படி நடக்க வேண்டும் எனவும் நிபுணர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.