
ராம்தேவ் கைது குறித்து அவர் கூறுகையில், நாட்டை திசை திருப்பும் கிரிமினல் ராம்தேவ். ராம்தேவ் போன்றவர்கள் டெல்லியை வன்முறைக் களமாக்க முயல்வதை அனுமதிக்க முடியாது. யோகா முகாம் நடத்தத்தான் அவருக்கு அனுமதி தரப்பட்டிருந்ததே தவிர, போராட்டம் நடத்த அல்ல. மக்களை தூண்டி விட்டு வருகிறார் ராம்தேவ்.
போராட்டத்தை நிறுத்தினால் அவருடன் பேச அரசு தயாராகவே இருந்தது. ஆனால் அவர் பிடிவாதமாக இருந்தார். பிரணாப் முகர்ஜி போன்ற ஒரு மூத்த தலைவர், இவரைப் போய் விமான நிலையத்தில் வரவேற்று பேச வேண்டிய அவலமான நிலைக்குத் தள்ளப்பட்டது கோபத்தை ஏற்படுத்துகிறது என்றார் திக்விஜய் சிங்.
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.