
நடைபெறும் தமிழக உள்ளாட்சித் தேர்தலில் சோழபுரம் பேரூராட்சி தலைவர் பதவிக்கும், 7 கவுன்சிலர்கள் பதவிகளுக்கும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் இந்தக் கட்சி அலுவலகத்திற்கு மர்ம நபர்கள் சிலர் தீ வைத்துவி்டடு தப்பிவிட்டனர். தீ மளமளவென பரவியதில் அலுவலகத்தின் முன்பக்கம் முற்றிலும் எரிந்து போனது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இது குறித்து திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் மனித நேய மக்கள் கட்சி சோழபுரம் நகர தலைவர் முகமது பாரூக் புகார் செய்தார். அவரது புகாரின்பேரில் இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுக் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.