சேலம் அம்மாபேட்டையில் உழவர் சந்தை உள்ளது. இந்த உழவர் சந்தையின் முகப்பில் கலைஞர் கருணாநிதியால் அர்ப்பணிக்கப்பட்ட உழவர் சந்தை என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது. 05.04.2011 அன்று காலையில் பார்த்தபோது கலைஞர் கருணாநிதி என்ற வாசகம் கருப்பு மையினால் அழிக்கப்பட்டிருந்தது.
இதை பார்த்த திமுகவினர் உழவர் சந்தை முன்னர் கூட்டமாக கூடினர். பின்னர் திமுக மாநகராட்சி உறுப்பினர் திருஞானம் தலைமையில் திமுகவினர் உழவர் சந்தை அதிகாரிகளிடம் கலைஞர் பெயரை அழித்தது யார் என்று கேட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கலைஞர் பெயரை நாங்கள் அழிக்கவில்லை. கலைஞர் பெயரை நீக்கும்படி எங்களுக்கு உத்தரவும் வரவில்லை. யாரோ தவறான நோக்கத்தில் கலைஞர் பெயரை அழித்துள்ளனர். அவர்கள் யாரென கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும். இன்றே கலைஞர் பெயர் மீண்டும் எழுதப்படும் என்று சொன்னதை தொடர்ந்து திமுகவினர் கலைந்து சென்றனர்.
இதை பார்த்த திமுகவினர் உழவர் சந்தை முன்னர் கூட்டமாக கூடினர். பின்னர் திமுக மாநகராட்சி உறுப்பினர் திருஞானம் தலைமையில் திமுகவினர் உழவர் சந்தை அதிகாரிகளிடம் கலைஞர் பெயரை அழித்தது யார் என்று கேட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கலைஞர் பெயரை நாங்கள் அழிக்கவில்லை. கலைஞர் பெயரை நீக்கும்படி எங்களுக்கு உத்தரவும் வரவில்லை. யாரோ தவறான நோக்கத்தில் கலைஞர் பெயரை அழித்துள்ளனர். அவர்கள் யாரென கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும். இன்றே கலைஞர் பெயர் மீண்டும் எழுதப்படும் என்று சொன்னதை தொடர்ந்து திமுகவினர் கலைந்து சென்றனர்.
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.